ADDED : அக் 27, 2025 01:33 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலி ங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா முன் னிட்டு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் பர்வத வர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், இரவு 8 மணிக்கு சோடசோபா தீபாரதனை நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது. 29ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

