ADDED : டிச 25, 2024 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லாஸ் பேட்டை தொகுதி ஜீவானந்தபுரத்தில் நாதன் அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், 100க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி, சர்க்கரை 1 கிலோ, இளைஞர்களுக் டி-சர்ட் உள்ளிட்டவைகளை முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்ரமணி, வெங்கடேசன், விக்டர் விஜய், கார்த்தி, சந்துரு, வெங்கட், கனக வள்ளி, ஜானகி, கவுரி, வெண்ணிலா, புவனா, பிரேமா, மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.

