sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உப்பனாறு பாலம் கட்டி முடிப்பது எப்போது? பணிகள் துவங்கி 16 ஆண்டுகளாகிறது

/

உப்பனாறு பாலம் கட்டி முடிப்பது எப்போது? பணிகள் துவங்கி 16 ஆண்டுகளாகிறது

உப்பனாறு பாலம் கட்டி முடிப்பது எப்போது? பணிகள் துவங்கி 16 ஆண்டுகளாகிறது

உப்பனாறு பாலம் கட்டி முடிப்பது எப்போது? பணிகள் துவங்கி 16 ஆண்டுகளாகிறது


ADDED : நவ 01, 2024 05:38 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி உப்பனாறு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுச்சேரி நகர பகுதி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிராபிக் ஜாமை சமாளிக்க மறைமலையடிகள் சாலை காமராஜர் சாலையை இணைக்கும் வகையில் உப்பானறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

732 மீட்டர் நீளத்திற்கு இரு பக்கமும் நடைபாதையுடன் கூடிய பாலம் அமைக்க 2008ம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. முதலில் மேம்பாலம் கட்ட பணியை எடுத்த நிறுவனம் ரூ. 3.5 கோடிக்கு பைல் பவுண்டேஷன் அமைத்ததுடன் பணியை நிறுத்தியது. மீண்டும் பாலம் கட்ட கடந்த 2014ம் ஆண்டு ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடி கடனும், மாநில அரசு ரூ. 7.15 கோடி சேர்த்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.

என்.ஆர்.காங்., ஆட்சியில் துவங்கிய பாலம், 2016 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு இடையூறுகளை சந்தித்தது. பாலம் வேலை நடப்பதால், உப்பனாறு வாய்க்கால் வழியாக உருளையன்பேட்டை தொகுதிக்குள் மழைநீர் புகுவதாக கூறி பாலம் பணியை நிறுத்தினர். 2 ஆண்டிற்கு மேல் பணி நடந்ததால், கட்டுமான நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 2020ம் ஆண்டு பணி நிறுத்தி, கூடுதல் செலவினத்தை வழங்க கட்டுமான நிறுவனம் ஆர்பிடேஷன் சென்றது. அங்கு, கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 15 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணமும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலையுடன் பாலம் இணைக்க ரூ. 35 கோடியில் மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது.

டெண்டரை எடுக்க யாரும் முன் வராததால், 2வது முறையாக விடப்பட்டுள்ளது. அடுத்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக உப்பனாறு பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us