ADDED : பிப் 27, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: முள்ளோடை சாராயக்கடை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடை சாராயக்கடை அருகே நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

