தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிலிண்டர் முன்பதிவு சர்வர் முடங்கியது ஏன்? குடிமை பொருள் வழங்கல் துறை விளக்கம் 

 சிலிண்டர் முன்பதிவு சர்வர் முடங்கியது ஏன்? குடிமை பொருள் வழங்கல் துறை விளக்கம் 

 சிலிண்டர் முன்பதிவு சர்வர் முடங்கியது ஏன்? குடிமை பொருள் வழங்கல் துறை விளக்கம் 


ADDED : மார் 15, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காஸ் சிலிண்டருக்கான முன் பதிவு அதிகரித்ததால், சர்வர் முடங்கியதாக குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உத்தரவின்படி, வீட்டு உபயோகத்திற்கான எல்.பி.ஜி., சிலிண்டர்கள் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதை தடுக்க புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பு உள்ளன. விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என, எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மக்கள் பீதியடைந்து முன்கூட்டியே சிலிண்டர்களை பதிவு செய்து வருகின்றனர். வழக்கமாக தினசரி 4,273 ஆக இருந்த முன்பதிவு, தற்போது 9,060 ஆக உயர்ந்துள்ளது. இதுவே முன்பதிவு சர்வர்களில் நெரிசல் ஏற்படக் காரணமாகும்.

வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்கள், டீக்கடைகள் போன்ற வணிக இடங்களுக்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடுக்க உணவு கடத்தல் பிரிவு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்.பி.ஜி., சிலிண்டர்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எரிபொருள் தட்டுப்பாடு குறித்த சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம். தேவைப்படும்போது மட்டும் பதிவு செய்யவும். முன்கூட்டியே பதிவு செய்வதை தவிர்க்கவும்.

சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரிந்தாலோ அல்லது முறைகேடுகள் குறித்து புகாரளிக்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us