ADDED : ஜூலை 13, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தவளக்குப்பம், சடா நகரை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சரண்யா, 37. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்த சரண்யா மாயமாகி இருந்தார். உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
