ADDED : ஜன 07, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி லதா, 36. இவர் கடந்த 4ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.