ADDED : நவ 22, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ரெட்டியார்பாளையம், செல்லபாப்பு நகரை சேர்ந்தவர் சரவணன், 40; டிரைவர். இவரது மனைவி எரோனிமா மேரி, 35. இவர், கடந்த 14ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்ப வரவில்லை. இவரை உறவினர்கள் வீடு, உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
அவரது கணவர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

