ADDED : மார் 14, 2026 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.
பெரியக்காலாப்பட்டு, பாரதியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 33. இவரது மனைவி பூஜா, 20; வீட்டில் இருந்து இவர் கடந்த 5ம் தேதி, திடீரென மாயமானார்.
உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

