sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கரியமாணிக்கம் போக்குவரத்து சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

/

கரியமாணிக்கம் போக்குவரத்து சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

கரியமாணிக்கம் போக்குவரத்து சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

கரியமாணிக்கம் போக்குவரத்து சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : ஏப் 01, 2025 04:16 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியில் இந்தியன் வங்கி, வருவாய்துறை அலுவலகம், வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்று வட்டார 10 கிராமப் பகுதி மக்களின் அன்றாட தேவைக்கு கரியமாணிக்கம் வந்து செல்கின்றனர். இங்குள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் போக்குவரத்து போலீசார் கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்தனர். போக்குவரத்து சிக்னல் அமைத்து 3 மாதத்திற்கு மேலாகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வரமால் காட்சிப்பொருளாகவே உள்ளது.

இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்கிக் கொண்டு அவதியடைக்கின்றனர்.

ஆகையால் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us