/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் திருடிய பெண் கைது
/
காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் திருடிய பெண் கைது
ADDED : ஆக 29, 2025 03:13 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே காய்கறி கடை உரிமையாளர் வீட்டில், நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 42; காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் சண்முகம் இறந்த நிலையில், புவனேஷ்வரி, தனது மாமியார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 16ம் தேதி காலை புவனேஸ்வரி காய்கறி கடைக்கு சென்றார். அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெட்ரூம் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் பணம் மாயமாகி இருந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
புவனேஸ்வரி வீட்டின் மேலே உள்ள அறையில் வாடகைக்கு வசித்த நாகூரை சேர்ந்த பவானி 30; என்பவர், குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 8 சவரன் நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், தொடர்புடைய அவரது கணவர் சரவணன் 35; என்பவரை தேடி வருகின்றனர்.

