sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது

/

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது


ADDED : நவ 09, 2025 05:45 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் காந்தி வீதியை சேர்ந்தவர், மதுரை மனைவி வல்லத்தாள், 89. இவரது மகன்கள் வெளி நாட்டில் உள்ளனர். தனியாக வசித்து வந்த வல்லாத்தாள் வீட்டில், புதுக்கோட்டை, சகோதரபுரம் ராஜபாண்டி மனைவி பாண்டிச்செல்வி, 29; வேலை செய்து வந்தார்.

இவர், கடந்த செப்., 28ம் தேதி, மதுரை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு சென்று வருவ தாக கூறி சென்றவர், திரும்பிவரவில்லை.

வல்லத்தாள் கடந்த மாதம் 8ம் தேதி, பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 5 சவரன் நகை திருடு போயிருந்தது.

புகாரின் பேரில் பாண்டிச்செல்வியை அரியாங்குப்பம் போலீசார், பிடித்து விசாரித்தனர்.

அதில், கணவரை பிரிந்து வாழும், பாண்டிச்செல்வி, தனது இரண்டு மகன்களை படிக்க வைப்பதற்காக வீட்டு வேலைக்கு வந்த இடத்தில் நகையை திருடி சென்றுள்ளார்.

அங்கு, செயினை விற்று, இரண்டரை சவரனில் புதிய செயின் வாங்கிக் கொண்டு, மீதி பணத்தை செலவு செய்ததை ஒப்புக் கொண்டார்.

பாண்டிசெல்வியை கைது செய்த போலீசார், இரண்டரை சவரன் நகையை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us