sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் மோசடி

/

பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் மோசடி


ADDED : ஆக 20, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் நுாதன மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒதியஞ்சாலையை சேர்ந்த பெண் ஒருவர், முஸ்லிம் மேட்ரிமோனி கணக்கு துவங்கி, வரன் தேடியுள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், முகமது மாலிக் என்ற அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ் ஆப் மூலம், அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் முனைவர் பட்டம் முடித்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் குடியேறத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறி பழகியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 5ம் தேதி மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர் தற்போது டில்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அதிக அளவு யூரோக்களுடன் வந்ததால், வரி செலுத்தவில்லை எனக் கூறி, விமான நிலைய அதிகாரிகள் தன்னை கைது செய்து விட்டதாக கூறினார். அதில் இருந்து வெளிவர ரூ.3 லட்சம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதைநம்பிய அப்பெண் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.

இதேபோல், முத்திரையார்பாளையத்தை சேர்ந்த நபர் 98 ஆயிரம், ரெட்டியார்பாளையம் பெண் 7 ஆயிரம், சாரத்தை சேர்ந்தவர் 90 ஆயிரம், கோவிந்தசாலையை சேர்ந்தவர் 43 ஆயிரம், பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் 7 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us