ADDED : செப் 18, 2024 10:01 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: குழு கடனை கட்ட முடியாமல் மனமுடைந்த பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி ராக்கம்மா, 50;இவர் குடும்ப வறுமையின் காரணமாக மூன்று குழுவில் கடன் வாங்கி இருந்தார். ராக்கம்மா இந்த கடனை கட்டமுடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ராக்கம்மா வீட்டில் உள்ள சமையல் அறையில் மூங்கில் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புகாரின் பேரில் திருபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
