ADDED : பிப் 08, 2026 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் கழுத்து வலி காரணமாக பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; கூலி தொழிலாளி.இவரது மனைவி வள்ளி, 58; கடந்த மூன்று ஆண்டுகளாக கழுத்து நரம்பு தேய்மானம் காரணமாக வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று கழுத்து வலி அதிகரித்தால், வீட்டின் பின்புறமும் உள்ள மாட்டு கொட்டகையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

