ADDED : ஜூலை 23, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார், புளியஞ்சாலை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்; டிரைவர். இவருக்கு பிரியதர்ஷினி 32, விஜயராணி 31, இரண்டு மனைவி உள்ளனர். இவர் இரண்டாவது மனைவி விஜயராணியுடன், திருக்காமீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராமன் கடந்த 11ம் தேதி லாரியில் லோடு ஏற்றிச் சென்றார். கடந்த 14ம் தேதி வீட்டிற்கு வந்தார்.
அப்போது அவரது இரண்டாவது மனைவி காணவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

