நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: குளியலறையில் வழுக்கி விழுந்த கூலித்தொழிலாளி இறந்தார்.
சூரமங்கலம், மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 43; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குளியலறைக்கு சென்ற பாஸ்கரன் தரையில் வழுக்கி விழுந்தார்.
அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி பேபிஷாலினி கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.