ADDED : மார் 17, 2025 02:33 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளார் இளையான்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65; கூலி தொழிலாளி.
குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் வாஞ்சியாற்றில் ஆகாய தாமரைச்செடி நடுவே இறந்த நிலையில் அவரது உடல் மிதந்தது. திருநள்ளாறு போலீசார், அவரது உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
