நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு, 38; கூலித்தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். கடந்த 15ம் தேதி காலை, கணபதிசெட்டிக்குளம் பகுதிக்கு மது குடிக் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரை தேடிக் கொண்டு அவரது சகோதரர் நந்தகோபால் கணபதி செட்டிக்குளம் வந்தார். பிள்ளைச்சாவடியில் உள்ள காலி நிலத்தில் ஆனந்தவேலு இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

