sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் நிறைவு விழா

/

பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் நிறைவு விழா

பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் நிறைவு விழா

பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் நிறைவு விழா


ADDED : நவ 08, 2024 05:22 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணினி தமிழ் பேரவையின் இரண்டு நாள் பயில ரங்கம் நிறைவு விழா நடந்தது.

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி தமிழ்த் துறை கணித்தமிழ்பேரவை சார்பில் இருநாள் கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் துவங்கியது.

இரண்டாம் நாள் முதல் அமர்வில், கணினி, தமிழ் தட்டச்சு எனும் தலைப்பில் பேராசியர் குப்புசாமி பேசினார். முனைவர் வஜ்ரவேலு நெறியாளுகை செய்தார்.

இரண்டாம் அமர்வு பேராசியர் சந்திரா தலைமையில் நடந்தது. இதில் பேராசியர் பட்டம்மாள் தொழில்நுட்ப உலகில் மகளிர் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி னார்.

பின் நிறைவு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியல் புல முதன்மையர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழ்த் துறை தலைவர் சேதுபதி கணினி தமிழ் போக்குகள் குறித்து எடுத்துரைத்தார், மாணவி நிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாணவி ஜெயசூர்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us