ADDED : மார் 16, 2026 04:34 AM

புதுச்சேரி: இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி கிளை தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.
தொண்டமாநத்தம் கிறிஸ்ட் கலைக் கல்லுாரி முதல்வர் டேவிட் பிரேம்குமார், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் வழக்குகள் தொடர்பான நுகர்வோரின் புகார்களும் அதன் தீர்வுகளும் பற்றியும் பேசினார்.
சிறப்பு விருந்தினர் மூலக்குளம் கிறிஸ்ட் கலைக் கல்லுாரி முதல்வர் அன்பழகன் கட்டுரை போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை துணை செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.

