
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய கட்டட காங்கிரஸ் புதுச்சேரி பிரிவு, இந்திய பொறியாளர் நிறுவன புதுச்சேரி மாநில நடுவம் சார்பில் பொதுப்பணித்துறை ஆதரவோடு ' உலக நீர்நாள் விழா நடந்தது.
இந்திய கட்டட காங்கிரஸ் புதுச்சேரி பிரிவு செயலர் கந்தர்செல்வம் வரவேற்றார்.
இந்திய பொறியாளர் நிறுவன புதுச்சேரி மாநில நடுவத்தின் தலைவர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி பிரிவு தலைவர் சீனு திருஞானம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சுந்திரமூர்த்தி விழாவை துவக்கி வைத்து பேசினார்.
இந்திய கட்டட காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் ரமேஷ் வாழ்த்தி பேசினார் .
இதில், முனைவர் சீனுவாசமூர்த்தி, பொறியாளர் தேவதாசு 'நீரும் பாலினமும்' தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.

