ADDED : ஆக 20, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுாரில் நகராட்சி ஊழியரை தாக்கி பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த முரளி,57; இவர் புதுச்சேரி நகராட்சியில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆரியப்பாளையம் சாராயக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற முரளியை, ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுரேந்தர்,25; வழிமறித்து தாக்கி, முரளி வைத்திருந்த 600 ரொக்க பணம் மற்றும் ஒரு மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
முரளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் சுரேந்தர் மீது போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.
