UPDATED : ஆக 31, 2026 10:35 PM
ADDED : ஆக 31, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் பொதுமக்களை அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம் மேலவாஞ்சூர் மாதா கோவில் பகுதியில் நேற்று முன்தினம் திருப்பட்டினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை அவதுாறாக பேசி , திட்டி இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த வாபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர் நாகூர் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம், 29; என்பது தெரியவந்தது.
திருப்பட்டினம் போலீசார் பெரியநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
