நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள இருளஞ்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கநாதன் 42; இவரது மகள் ஞானஸ்ரீ 17; 10-ம் வகுப்பு படித்துள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த ஞானஸ்ரீ காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் உறவினர் வீடு மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து லிங்கநாதன் புகாரின் பேரில் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.