ADDED : அக் 12, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்; பொமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ், 28, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம் - மதகடிப்பட்டு சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.