ADDED : ஜன 19, 2026 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் மேட்டுத் தெரு சந்திப்பில், வி.ஐ.பி., நகர் பகுதியில் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
போலீசார் விசாரணை யில், அவர், கடலுார் அடுத்த குமராபுரம், கலைஞர் நகரை சேர்ந்த மனோஜ், 23, என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

