ADDED : பிப் 17, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொது இடத்தில், அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் - தானாம்பாளையம் சாலையில், வாலிபர் அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
பெரியக்காட்டுப்பாளையம் சிவனார்புரத்தை சேர்ந்த ஹரிதாஸ், 24; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

