ADDED : ஆக 28, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: போதையில் அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் பகுதியில் அரியாங்குப்பம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் மது போதையில், நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசி கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். நோணாங்குப்பம் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேஷ், 24, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.