ADDED : ஆக 21, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் 33, என்பவர், மது குடித்துவிட்டு, கடற்கரை சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

