ADDED : ஜன 19, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது மங்கலம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 25, என்பவர் மது போதையில் மங்கலம் - ஏம்பலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

