ADDED : மார் 22, 2026 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மினி லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ஏம்பலம் - செம்பியப்பாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் நோக்கி வந்த டி.என்.75.எம்.0216 பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த பள்ளிதென்னல் பகுதியைச் சேர்ந்த நவீன், 19, என்பவரை விசாரித்தனர். அவர் ஆற்றுப்படுக்கையில் இருந்து மணல் திருடி வந்து விற்பதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

