ADDED : மே 05, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை பஸ் நிலையத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது கடலுார் மாவட்டம், ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் 33, என்ப வர் மதுபோதையில் மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.