ADDED : ஜூலை 14, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், மிட்டா மண்டகப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயசுதன் 28, என்பவர் மது குடித்துவிட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.