நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திண்டிவனம் கண்ணியம் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ், 36, என்பவர் மது போதையில் புதுச்சேரி - லிங்காரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

