ADDED : ஜன 04, 2024 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காததால் பெண் இறந்ததை கண்டித்து, இளைஞர் காங்., சார்பில் புதுச்சேரியில் முற்றுகை போராட்டம் நடந்தது.
வில்லியனுாரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காததால், பெண் இறந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி நலவழி மற்றும் குடும்ப நல இயக்குனரகம் அலுவலகம் முன்பு இளைஞர் காங்., சார்பில்நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.தலைவர் ஆனந்தபாபு முன்னிலையில், இளைஞர் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.