ADDED : ஜன 18, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்கால், கீழவாஞ் சூர் தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த திரிலோசன்தாஸ், 28, என்பவர் வேலை செய்தார். கடந்த 10ம் தேதி வேலை செய்தபோது, காஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த திரிலோசன்தாஸ் தஞ்சாவூர் தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.