ADDED : செப் 19, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, பாரதி வீதி கோவிந்தன் மனைவி கங்கா, 39; வீட்டிலேயே டிபன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மணிகண்டன், 22; என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று வழக்கம் போல் காலை கடையை திறந்து, வியாபாரத்தை முடித்து கொண்டு காலை 11:45 மணிக்கு கடை மூடியபோது, கடையில் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் அவரது மகன் மணிகண்டன், கடையின் வெளியே இருந்த மின்சார ஒயர் ெஷட்டரை பிடித்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
மணிகண்டனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
