sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

யூடியூப் வீடியோ ரிவ்வியூ மோசடி: பணத்தை இழந்த பட்டதாரி தற்கொலை

/

யூடியூப் வீடியோ ரிவ்வியூ மோசடி: பணத்தை இழந்த பட்டதாரி தற்கொலை

யூடியூப் வீடியோ ரிவ்வியூ மோசடி: பணத்தை இழந்த பட்டதாரி தற்கொலை

யூடியூப் வீடியோ ரிவ்வியூ மோசடி: பணத்தை இழந்த பட்டதாரி தற்கொலை


ADDED : பிப் 04, 2025 05:49 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: யூடியூப் வீடியோக்களை பார்த்து ரிவ்வியூ கொடுத்தால் பணம் வழங்குவோம் என்ற மோசடியில் ரூ. 95 ஆயிரம் இழந்த பட்டதாரி வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சபரிவாசன், 25; எம்.டெக்., பட்டதாரி. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ்ஆப் எண்ணில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என்ற தகவல் வந்தது. யூடியூப் வீடியோக்களை பார்த்து ரிவ்வியூ கொடுத்தால், பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மர்ம நபர் அனுப்பிய வீடியோக்களை பார்த்து சபரிவாசன் ரிவ்வியூ கொடுத்து வந்தார்.

அதிக பணம் வேண்டும் என்றால், முதலில் பணம் டெபாசிட் செய்து பிரிமியர் கஸ்டமராக மாற வேண்டும். அதன் பின்பு வீடியோக்களை ரிவ்வியூ செய்தால் அதிக பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

சபரிவாசன் பலரிடம் கடன் வாங்கி பணம் அனுப்பி வீடியோக்களை பார்த்து ரிவ்வியூ செய்து வந்தார். ரூ. 95 ஆயிரம் பணம் செலுத்தியதில், ரூ. 2 லட்சம் வரை அவரது ஆன்லைன் அக்கவுண்டில் காண்பித்துள்ளது.

மேலும் பணம் செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். கடன் வாங்கி அனுப்பிய பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் ஏமாற்றியதால் விரத்தி அடைந்த சபரிவாசன் நேற்று முன்தினம் தனது வீட்டு மின் விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இறப்பதற்கு முன்பு சபரிவாசன் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், கடன் வாங்கிய பணம் மற்றும் செலவுக்கு வாங்கிய பணத்தை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்து விட்டேன் என எழுதி வைத்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us