ADDED : மார் 20, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :  காணாமல் போன ஜிப்மர் செவிலியரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஹரியனாவை சேர்ந்தவர் உஷா, இவரது மகள் தனசில் குண்டு, 25; ஜிப்மரில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவிலியர் அதிகாரியாக பணி செய்து வருகிறார்.
இவர், கோரிமேட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், தினமும் பெற்றோரிடம் போனில் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல் தனசில் குண்டு பெற்றோருக்கு போன் செய்யவில்லை. மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதிர்சியடைந்த உஷா புதுச்சேரிக்கு நேற்று வந்து, கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

