/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
/
ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
ADDED : ஜூலை 19, 2025 09:44 PM

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடர் நடக்கிறது. இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் ராஜுலு ராமு 11-5 என யு.ஏ.இ.,யின் மைஷா உமர் கானை வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 11-5 என மதுமிதாவை (யு.ஏ.இ.,) வீழ்த்தினார். பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மன்சா ரவாத் ஜோடி 11-4 என யு.ஏ.இ.,யின் வைதேகி, மதுமிதா ஜோடியை தோற்கடித்தது.
முடிவில் இந்திய அணி 110-83 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.