ADDED : நவ 01, 2024 07:58 PM

சார்புரூக்கன்: ஹைலோ ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா முன்னேறினர்.
ஜெர்மனியில், ஹைலோ ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் கல்லே கோல்ஜோனென் மோதினர். முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றிய ஆயுஷ் ஷெட்டி, இரண்டாவது செட்டையும் 21-18 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயத்தால் சதிஷ் குமார் விலகியதால், பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் துய் லின் குயென் மோதினர். மொத்தம் 45 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய மாளவிகா 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 12-21, 17-21 என டென்மார்க்கின் ஜூலி டவால் ஜாகோப்சனிடம் தோல்வியடைந்தார்.