/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்
/
சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்
ADDED : மே 22, 2024 11:12 PM

கோலாலம்பூர்: உலக பாட்மின்டனில் 450வது வெற்றி பெற்றார் இந்தியாவின் சிந்து.
மலேசியாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தொடரின் 'நம்பர்-5' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-17 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டையும் 21-16 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
450 வது வெற்றி
சர்வதேச பாட்மின்டன் அரங்கில் 14 வது இடத்திலுள்ள சிந்து, நேற்று தனது 450வது வெற்றியை (203 தோல்வி) பதிவு செய்தார். இதற்கு முன் 6 நட்சத்திரங்கள் இதுபோல சாதித்துள்ளனர்.
அஷ்மிதா அபாரம்
மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா, லின் சிக் யுன் (சீன தைபே) மோதினர். இதில் அஷ்மிதா 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் உன்னாதி, 13-21, 18-21 என காவோ பங்கிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய தம்பதி சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி, 21-15, 12-21, 21-17 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், சாய் பிரதீக் ஜோடி 21-21, 21-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் மிங் செ லு, டங் கெய் வய் ஜோடியை வீழ்த்தியது.

