/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: அரையிறுதியில் தனிஷா-கபிலா
/
பாட்மின்டன்: அரையிறுதியில் தனிஷா-கபிலா
ADDED : செப் 13, 2024 10:26 PM

ஹோ சி மின் சிட்டி: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் தனிஷா, துருவ் கபிலா ஜோடி முன்னேறியது.
வியட்நாமில், 'சூப்பர்-100' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, சகநாட்டை சேர்ந்த சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா வரியாத் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை சதிஷ் குமார், ஆத்யா ஜோடி 21-14 எனக் கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட தனிஷா, கபிலா ஜோடி 2வது செட்டை 21-10 என தன்வசப்படுத்தியது. தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-14 என வென்றது. மொத்தம் 44 நிமிடம் நீடித்த போட்டியில் தனிஷா, கபிலா ஜோடி 14-21, 21-10, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண், ஜப்பானின் ஷோகோ ஒகாவா மோதினர். இதில் ஏமாற்றிய தருண் 13-21, 13-21 என தோல்வியடைந்தார்.