sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...

/

இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...


ADDED : அக் 15, 2024 10:53 PM

Google News

ADDED : அக் 15, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடென்ஸ்: டென்மார்க் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் சிந்து.

டென்மார்க்கில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, சீன தைபேவின் போ பாய் யுவை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-8 என எளிதாக கைப்பற்றினார். அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் சிந்து, 13-7 என முன்னிலையில் இருந்தார். அப்போது காயம் காரணமாக பாய் யு விலகிக் கொள்ள, சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி, 13-21, 12-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மாளவிகா, 13-21, 12-21 என சீன வீராங்கனை நிகுவேனிடம் வீழ்ந்தார்.

லக்சயா ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லு குவாங் ஜுவை சந்தித்தார். முதல் செட்டை லக்சயா சென் 21-12 என கைப்பற்றினார். பின் அடுத்த செட்டை இவர், 19-21 என போராடி இழந்தார்.

மூன்றாவது, கடைசி செட்டில் 14-21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென், 21-12, 19-21, 14-21 என்ற செட்டில் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us