
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சார்லந்த்ஹாலே: ஜெர்மனி பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்.
ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் சங்கர் முத்துசாமியை சந்தித்தார். இதில் லக்சயா, 21-14, 21-11 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் கிரண், 18-21, 21-18, 21-19 என பிரான்சின் போபோவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர்-42'), உலகின் 'நம்பர்-5' வீரர், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியிடம் 11-21, 12-21 என தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா, 19-21, 21-8, 21-13 என்ற கணக்கில் சக வீராங்கனை ஸ்ரீயான்ஷியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

