sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி

/

அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி

அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி

அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி


ADDED : ஜன 17, 2025 10:52 PM

Google News

ADDED : ஜன 17, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் தோல்வியடைந்தார் சிந்து.

இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், 'நம்பர்-16' ஆக உள்ள இந்தியாவின் சிந்து, உலகத் தரவரிசையில் 5வதாக உள்ள இந்தோனேஷியாவின் மரிஸ்காவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சிந்து 9-21 என மோசமாக இழந்தார். பின் சுதாரித்த இவர், அடுத்த செட்டை 21-19 என வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட் 17-17 என சமனில் இருந்தது. அடுத்து தொடர்ந்து 4 'கேமை' இழந்த சிந்து, 17-21 என கோட்டை விட்டார் சிந்து.

முடிவில் சிந்து 9-21, 21-19, 17-21 என போராடி வீழ்ந்தார். கடைசியாக 2017ல் கோப்பை வென்ற சிந்து, மீண்டும் ஏமாற்றினார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் கிரண், 13-21, 19-21 என சீனாவின் வெங்கிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் யோங் ஜின், மின் காங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-10, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us