/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
/
பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
ADDED : மே 29, 2025 10:51 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர்-27'), 'நம்பர்-7' ஆக உள்ள இந்தோனேஷியாவின் சபர் கர்யமன், முகமது ரேஜா ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த இப்போட்டியில் இந்திய ஜோடி 19-21, 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-17'), சீனாவின் சென் யுபெய் ('நம்பர்-5') மோதினர். ஒரு மணி நேரம், 5 நிமிடம் நடந்த போட்டியில், சிந்து 9-21, 21-18, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். சென் யுபெய்க்கு எதிராக மோதிய 13 போட்டியில் சிந்து அடைந்த 7வது தோல்வி இது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரனாய், 16-21, 14-21 என பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 8-21, 10-21 என சீனாவின் ஜியா, ஜெங் ஜோடியிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ரோஹன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 10-21, 16-21 என ஹாங்காங்கின் சன் மான் டங், இங் சுயட் ஜோடியிடம் வீழ்ந்தது.