/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
/
திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
ADDED : டிச 12, 2024 11:06 PM

ஹாங்சு: பாட்மின்டன் வேர்ல்டு டூர் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றது.
சீனாவில் பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 'டாப்-8' பட்டியலில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கின்றனர். 'நம்பர்-8' ஆக உள்ள இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி பெண்கள் இரட்டையரில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 3 போட்டியில் பங்கேற்கும். பட்டியலில் முதல் இரு இடம் பிடித்தால் அரையிறுதிக்கு செல்லலாம்.
முதல் போட்டியின் சீன ஜோடியிடம் தோற்ற இந்திய ஜோடி, நேற்று தனது இரண்டாவது போட்டியில் 'நம்பர்-6' ஆக உள்ள மலேசியாவின் டான் பியர்லி, தினா ஜோடியை சந்தித்தது.
இதில் வென்றால் மட்டும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் இந்திய ஜோடி 5-8 என பின்தங்கியது. பின் சுதாரித்த இந்திய ஜோடி, 18-17 என முந்தியது. ஒரு கட்டத்தில் ஸ்கோர் 19-19 என ஆனது. அடுத்து இரு 'கேம்களை' தொடர்ந்து கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-19 என வசப்படுத்தியது.
46 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இன்று தனது மூன்றாவது, கடைசி போட்டியில் ஜப்பானின் நாமி மட்சுயமா, சிஹாரு ஷிதா ஜோடியை சந்திக்கிறது. இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

