/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
தைபே பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்
/
தைபே பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்
ADDED : மே 08, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா முன்னேறினர்.
சீனதைபேயில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 15-21, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13-21, 9-21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ் யுன் மோதினர். இதில் உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.